தனிமைக் காதலன்
– தனிமைக் காதலன் – தெரிந்தவர்களை வெறுத்து விடுகிறோம் தெரியாதவர்களை விரும்பி விடுகிறோம் தெரிந்தபின் அவர்களையும் விலக்கி விடுகிறோம் மொத்தத்தில் தனிமையை மட்டும் இழக்க மறுக்கிறோம்.
கவிப்பித்தன் தமிழ் கவிதைகள் — காதல், தனிமை, வாழ்க்கை வரிகள் அனைத்தும் இங்கே படியுங்கள்.
– தனிமைக் காதலன் – தெரிந்தவர்களை வெறுத்து விடுகிறோம் தெரியாதவர்களை விரும்பி விடுகிறோம் தெரிந்தபின் அவர்களையும் விலக்கி விடுகிறோம் மொத்தத்தில் தனிமையை மட்டும் இழக்க மறுக்கிறோம்.
– ராமனும் ராவணனும் – கணவன் ராமனாக இருக்க வேண்டினாலும் அண்ணன் ராவணனாகவே இருக்க வேண்டும் என்றால்.
– வதைக்காதே – தேவை உடல் என்பதற்காய் பெண்ணை வதம் செய்து விடாதே காமம் சுகம் என்பதற்காய் காதல் — தலை கொய்து விடாதே.
– அவள் ஒரு தேவதை – பொய்மையை நம்பவில்லை அதனால் உண்மையில் இறந்து விட்டான் — அவள் ஒரு தேவதை.
– அவள் கனவு – ஆகட்டும் அனைத்து பெண்கள் ஆசைகளும் நிலவைத் தொடுவதாய் — ஆதலால் மானம் காக்கும் ஆடைகள் அவிழ்ந்து வீழ்வதா..?
– வறுமையின் வேதனை – உண்டிட உணவும் இல்லை உடுத்திட உடையும் இல்லை மார்பினில் பாலும் இல்லை பாலகன் பார்வையில் ஏக்கமோ குறையவில்லை உண்மையில் உறவும் இல்லை உதவிட யாருக்கும் மனமும் இல்லை — மண்ணை மணப்பதைத்தவிர வேறு வழியும் இல்லை.
– இரவின் மௌனம் – நள்ளிரவில் விழித்திருந்து நாள் தோறும் ரசித்திருக்க நிலவே நீ வான் நின்று தினம் தோறும் நகைத்திருக்க இரவோடு நானும் உன்னை மனதோடு காதல் கொள்ள வருவாயோ நீயும் இங்கு — ஒருமுறை வாழ்ந்து பார்க்க…
– முடிவில்லா கதை – இன்னும் எத்தனை பேனைகளின் ஆயுட் தீர்ந்து போமோ? — உன்னைப்பற்றி நான் எழுதும் போதெலாம்!